உன்னுடன் பேச ஆசை (Desire to Talk to you)
Author :ம. சுரேஷ்
Buy the book
Product Details
காதல் என்ற இனிமையான உணர்வு எல்லா உயிர் இணங்களுக்கும் ஏற்படும் ஒரு உணர்ச்சி, அந்த உணர்வை நானும் பெற்றுள்ளேன். அதை என் நண்பர்கள் பலரிடமும் கண்டுள்ளேன். பலருக்கு பலவிதமான உணர்வுகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொன்றும் புது புது கவிதைகள். என் வாழ் ...
Author Information
நான் சுரேஷ், தாய் திருமதி சாளாம்மாள், தந்தை திரு மகேந்திரன், வேலூர் மாவட்டம் என் சொந்த ஊர். என் உடன் பிறப்புகள் அக்கா அம்பிகா, அண்ணன் வெங்கடேசன். எ...
Buy the book
Book Details
Category :Romance
ISBN No :9781545743102
Print ISBN No :9781545743102
Language :Tamil
You can read this eBook using any of the following e-Reder apps and devices:
IOS
Android
Mac
Windows
PRODUCT DETAILS
காதல் என்ற இனிமையான உணர்வு எல்லா உயிர் இணங்களுக்கும் ஏற்படும் ஒரு உணர்ச்சி, அந்த உணர்வை நானும் பெற்றுள்ளேன். அதை என் நண்பர்கள் பலரிடமும் கண்டுள்ளேன். பலருக்கு பலவிதமான உணர்வுகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொன்றும் புது புது கவிதைகள். என் வாழ் நாள் ஆசையான என் புத்தக கனவை, முதல் அடியாய் தொடங்க இந்த காதல் உணர்வு என்னை தூண்டியது. ஆனால் இந்த காதல் உணர்வை பல எழுத்தாளர்கள் பல விதமாக கொடுத்திருகிரர்கள். பல உருவங்களுடன் பல வடிவங்களுடன் சொல்ல பட்ட காதலை நானும் சொல்ல வேண்டும். அப்படி பல நாட்கள், பல மாதங்கள் நான் யோசிக்கும் போது தோன்றியது தான் இந்த உணர்ச்சி "ஒரு கோழையின் காதல்". இந்த கோழை காதலன் எப்படி எல்லாம் அவனது காதலியிடம் பேச ஆசை கொண்டான் என்ற அவனது வார்த்தைகள் தான் என் எழுத்துக்கள். இதோ அந்த கோழை காதலனின் ஆசை வார்த்தைகள்.
AUTHOR INFORMATION
நான் சுரேஷ், தாய் திருமதி சாளாம்மாள், தந்தை திரு மகேந்திரன், வேலூர் மாவட்டம் என் சொந்த ஊர். என் உடன் பிறப்புகள் அக்கா அம்பிகா, அண்ணன் வெங்கடேசன். என் தந்தை ஒரு பூ வியாபாரி. நான் நடுதர குடும்பத்தை சேர்ந்த ஒரு சரசாரி மனிதன். பள்ளி நாட்களில் நானும் என் அண்ணன் வெங்கடேசனும் எங்கள் தந்தையுடன் பூ வியாபாரம் செய்வோம். சிறு வயது முதலே படிப்பில் எனக்கு ஆர்வம் வரவில்லை. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன், ஆனால் கலை துறையில் நானும் இருக்க ஆசை கொண்டேன். படிப்பை விட்ட பிறகு அண்ணன் வெங்கடேசனுடன் சிறு சிறு வேலைகள், தொழில்கள் செய்துகொண்டிருந்தேன் அப்படியே வருடங்கள் ஓடின. நிறைய சம்பாதித்தேன் நிறைய அனுபவங்கள் கற்றேன். 2014 ஆம் வருடம் எனக்கு பிடித்த நான் ஆசை பட்ட துறையில் எப்படி இடம் பிடிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள தலைநகரம் ஆன சென்னை க்கு வந்தேன். பல முயற்சிகள் செய்து சில விஷயங்கள் கற்றேன். அப்படி முயர்ச்சிக்கும் காலங்களில் எனக்கு கிடைத்த நண்பர்கள் சிலரின் உதவியோடு இதோ என் ஆசையின் முதல் பதிவு "உன்னுடன் பேச ஆசை".
